ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு “காசிக்கு செல்கிறேன். கங்கையில் சமாதி அடைகிறேன் என கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமாகி விட்டார். அவரை உறவினர்களும், நண்பர்களும் காசியில் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் மதனின் மனைவி சுமலதா மற்றும் தாயார் தங்கம் ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து மதனை கண்டுபிடித்து தருமாறு மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார்.
மோசடி புகார்: இந்த நிலையில் மதன் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரில் சீட் வாங்கித்தருவதாக 52லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக மணப்பாறையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது மகன் 12ம் வகுப்பு படித்துள்ளான். அவனை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சேர்க்க மதனை அணுகினேன். அவர் அதற்கு 62 லட்சம் கேட்டார். நான் கடன் வாங்கி அந்தப் பணத்தை கொடுத்தேன். ஆனால் என் மகன் மருத்துவ கல்லூரியில் சேரும் அளவிற்கு மதிப்பெண் எடுக்கவில்லை. அதனால் பணத்தை திருப்பி கேட்டேன். 10 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு மீதியை இரண்டு நாட்களில் தருவதாகச் சொன்னார். ஆனால் தரவில்லை. இப்போது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரிடமிருந்து எனது பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் வெங்கடேசன் கூறியுள்ளர்.
பாரிவேந்தர் விளக்கம் : மதன் மாயம், பணமோசடி விவகாரங்கள் தொடர்பாக எஸ்.ஆர்.எம் குழும தலைவரும், இந்திய ஜனநாயக கட்சித் தலைவருமான பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் மதன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதமே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். வேந்தர் மூவீசுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே அவரே கூறியிருக்கிறார். மதன் மூலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர் போலீசை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எந்தவித தொடர்புமின்றி மதன் என்பவர் தன்னிச்சையாக செய்த மோசடிக்கும், எமது நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. சட்டரீதியான விசாரணைககு நாங்கள் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.