ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடக்கும் சென்னை புத்தக கண்காட்சி இந்த ஆண்டு நாளை முதல் வருகிற 13ந் தேதி வரை நடக்கிறது. இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகிறது.
திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவின் நுல்களை மட்டும் விற்பனை செய்ய வைரமுத்து நூலரங்கம் என்ற பெயரில் இரண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது (எண்: 614. 615). இந்த அரங்கில் வைரமுத்து எழுதிய அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். வருகிற ஜூன் 4ந் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த அரங்குகளுக்கு வைரமுத்து வருகிறார். புத்தகம் வாங்குகிறவர்களுக்கு கையெழுத்திட்டு தருகிறார். வாசகர்களுடன் உரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி புக் பேலஸ் செய்துள்ளது. ஒரே எழுத்தாளருக்கு இரண்டு தனி அரங்குகள் அமைக்கப்படுவது புத்தக கண்காட்சி வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.