மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட்டில் உள்ள அறிவுஜீவி நடிகைகளில் நந்திதாதாசும் ஒருவர். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை படங்களில் நடித்தார். அவர் லெஸ்பியனாக நடித்த 'பயர்' படம் சென்சாரில் சிக்கி கடும் போராட்டத்துக்கு பிறகுதான் வெளிவந்துதது. இந்த நிலையில் அவர் “சினிமாவுக்கு தணிக்கை குழுவே தேவையில்லை. எது நல்ல படம், எது கெட்ட படம் என்று மக்களே தீர்மானிக்கட்டும் என்ற பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு படத்தை கஷ்டப்பட்டு எடுத்துவிட்டு அதற்கு தணிக்கை சான்றிதழ் வாங்க அதைவிட கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது. உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்க்கும் படத்தை 5 பேர் நல்ல படம், கெட்ட படம் என்று தீர்மானிப்பது எப்படி சரியாகும். எனக்கு பிடிக்கும் படம் இன்னொருவருக்கு பிடிக்காது. இன்னொருவருக்கு பிடிக்கும் படம் எனக்கு பிடிக்காது விருப்பங்கள் மாறுபடும். எனவே ஒரு படம் நல்ல படமா, கெட்ட படமா என்கிற முடிவை மக்களிடமே விட வேண்டும். நல்ல படம் என்றால் ஆதரிப்பாளர்கள். கெட்ட படங்கள் என்றால் புறக்கணிப்பார்கள்.
தணிக்கு குழு கெட்ட படங்களை தடுத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் பிறகு எப்படி வன்முறை படங்களும், பெண்களை அசிங்கப்படுத்தும் படங்களும் வெளிவருகிறது. அதனை தணிக்கை குழு எவ்வாறு அனுமதித்தது. எனவே தணிக்கை குழு தேவையில்லை எந்த படத்தை பார்ப்பது, எதை தவிர்ப்பது என்பதை மக்களே முடிவு செய்யட்டும் தணிக்கை குழு சொல்லித்தர வேண்டியதில்லை. இவ்வாறு நந்திதாதாஸ் கூறியுள்ளார்.