ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்க சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட படம் - 'அச்சம் என்பது மடமையடா'. சிம்பு நடித்த படம் குறித்த காலத்தில் முடிவடையாது வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகும் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப இந்தப்படமும் ஆமை வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இத்தனைக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் 'தள்ளிப்போகாதே...' என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது 'ராசாளி...' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளார்கள். அந்தக்காலத்துப் பாடல்களின் மெட்டைக் கொண்டு, இப்பாடலுக்கு வித்தியாசமாக இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம் ஆகிய பாடல்களை காப்பியடித்தே ரஹ்மான் இப்பாடலை உருவாக்கியிருப்பதாக, ராசாளி பாடல் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். தன்னைப் பற்றி கடுமையான விமர்சனம் எழுவதைக் கண்ட ஏ.ஆர்.ரகுமான் இப்பாடல் குறித்து தன்னுடைய முழு விளக்கத்தையும் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“அச்சம் என்பது மடமையடா திரைப்படத்துக்காக உருவாக்கிய ராசாளி பாடலில் ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டு செல்லும் சிறு முயற்சி இது. புதிய இசையும் மரபுசார் இசையும் இணையும்போது கிடைக்கும் அனுபவம் இது.” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.