ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள இறைவியில் ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன் என்கிறார் விஜயசேதுபதி. அவர் மேலும் கூறும்போது, இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் முதலில் சொன்னபோது சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் அதை படமாக்குவதற்கு முன்பு சொன்னபோது ஒரு அழுத்தமான, சமூகத்துக்கு தேவையான படமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நான் இதுவரை நடித்ததில் ஒரு சிறந்த படம். எனது கேரியரில் இது முக்கியமான படமாகவும் இருக்கும். இந்த கதையில் நான் மிகவும் ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
இந்த படத்தில் என்னுடன் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவை படங்களில் பார்த்து அவரை ஒருவிதமாக கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் அவர் டோட்டலாக வேறுமாதிரி இருந்தார். சீனியர் என்றாலும் என்னுடனும், பாபி சிம்ஹாவுடனும் இனிமையாக பழகினார். அதனால் அவருடன் நடிப்பதற்கு எளிதாக இருந்தது.
குறிப்பாக, நம்முடன் இருக்கும் பெண்களுக்கு நாம் கொடுக்கத்தவறிய மதிப்பையும், மரியாதையையும், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத மனிதர்களைப்பற்றியும் இந்த படத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த வகையில், இந்த படத்தில் நடித்துள்ள பெண்களான அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட அனைவருமே கதாபாத்திரங்களாக மாறி நடித்துள்ளனர். இந்த இறைவி பெண்களுக்கு முக்கியமான படமாகவும், ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாகவும் உருவாகியிருக்கிறது என்கிறார்.