ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், சைவம்... என தன்னுடைய சிறப்பான எழுத்தாலும், இயக்கத்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருபவர் இயக்குனர் விஜய். தற்போது பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் ஆகியோரை வைத்து DEVI(L) என்னும் படத்தை இயக்குகிறார். சென்ட்டிமென்ட், காமெடி, காதல், அதிரடி என அனைத்து வகை படங்களிலும் வெற்றி கண்ட இவர், தற்போது இந்தப்படத்தின் மூலம் திகில் படத்தில் அடியெடுத்து வைத்துள்ளார் விஜய்.
இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வண்ணமாக இயக்குனர் விஜய்யோடு இணை கதாசிரியராக கை கோர்த்திருக்கிறார், உலகளவில் புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் - கதாசிரியர் பவுல் ஆரோன். இவர், 1999-ம் ஆண்டு வெளியான இன் டூ டீப் என்னும் ஹாலிவுட் வெற்றி திரைப்படத்தை தயாரித்து, அதற்கு கதை எழுதியவர். அது மட்டுமில்லாமல் பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களான அண்டர் ஒன் ரூப், ரோனிஸ் காட் எ கன், பைலட் போன்ற பல புகழ் மிக்க தொடர்களுக்கும், படங்களுக்கும் பவுல் ஆரோன் பணியாற்றியுள்ளார்.
இதுப்பற்றி இயக்குநர் விஜய் கூறியுள்ளதாவது... இந்த தருணத்தை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நான் சைவம் திரைப்படத்தின் சவுண்ட் ரெகார்டிங்கில் இருக்கும் போது தான் எனக்கு குணல் ராஜன் என்னும் ஹாலிவுட் சவுண்ட் ரெகார்டிஸ்ட் மூலம் பவுல் ஆரோனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது நாங்கள் இருவரும் சைவம் படத்தை பற்றி கலந்துரையாடினோம். தற்போது ஆரோன் முன்வந்து எங்கள் படத்திற்காக கதை எழுதுவதை நினைக்கும் போது மெய்சிலிர்த்து போகிறேன். இதைவிட எனக்கு பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.