சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் |
கடந்த ஒருவாரமாகவே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு செய்தி சமந்தாவின் திருமணம் பற்றியது தான். பிரமோற்சவம் படத்தின் புரமோஷ்ன் நிகழ்ச்சியில் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சமந்தா, நான் சிங்கிள் என யார் கூறியது என்று எதிர்கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இதன்மூலம் சமந்தா காதலிப்பது மட்டும் உறுதியானது, அதேசமயம் அவர் யாரை காதலிக்கிறார் என்ற செய்தி வெளியாகவில்லை. அவர் ஒரு இளம் நடிகர் என்றும், இயக்குநர் என்று பரவலாக செய்தி வந்தது.
இந்நிலையில் சமந்தாவின் காதலர் யார் என்பதே தற்போது டோலிவுட்டில் பரபரப்பான விவாதமாகிவிட்டது. நடிகர் சித்தார்த்துடன் ஏற்பட்ட காதல் முறிவுற்கு பின்னர் காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்த சமந்தா, தற்போது நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்ததாகக் தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர் நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், தற்போது தெலுங்கு சினிமாவின் இளம் நடிகராகவும் வலம் வருகிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான யே மாய சேசாவே படத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அப்படத்திற்கு பின்னர் ஆட்டோநகர் சூர்யா, மனம் போன்ற படங்களிலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, தற்போது காதலாக வளர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. 29வயதை அடைந்து விட்டதால் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் சமந்தா முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களது திருமணம் இந்த வருட இறுதியில் நடைபெறும் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.