ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'. வினாடி வினா டைப்பிலான இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் ஒரு கோடி வரை பரிசாக பெறலாம். பங்கேற்பவர்கள் குறைந்தது 10 ஆயிரம் ரூபாயாவது பரிசாக பெறுவார்கள். இதன் முதல் சீசனை சூர்யா தொகுத்து வழங்கினார், இரண்டாவது சீசனை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். 3வது சீசனை அரவிந்த்சாமி தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி வருகிற 30ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புதன் வரை 3 நாட்கள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் புரமோவில் அரவிந்த்சாமி கூறியிருப்பதாவது: போட்டியென்றால் பயமா, கப்பலை ஏன் கரையில் கட்டி வைக்கிறோம் கண்காட்சிக்கா இல்லை. கடலை தாண்டுவதற்கு, இதுவா அதுவா என்ற குழப்பம் வாழ்க்கையில் எப்போதுமே வரக்கூடாது. வாங்க விளையாடலாம். போட்டி உங்களுக்கும் எனக்கும் இல்லை. நான் உங்க பக்கம்தான் என்கிறார் அரவிந்த்சாமி.