ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தை சசி இயக்கினார். இந்தப் படம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலைக் கொடுத்தது. தற்போது இந்தப் படம் 'பிச்சகாடு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான இந்தப் படம் அங்கும் வெற்றிகரமாக தனது ஓட்டத்தை துவக்கி வசூலை குவித்து வருகிறது.
இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது: இந்த வெற்றி இயக்குனர் சசிக்கும், தெலுங்கில் இந்தப்படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும் உரியது. அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு கதை கரு, தெளிவான திரைக் கதை அமைப்பு, நேர்த்தியான இயக்கம் என சசி வழங்க, நான் என்ன சளைத்தவனா என்று மிக பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி, அதிக அளவில் திரை அரங்குகள் எடுத்து பிச்சகாடு படத்தின் வெற்றியை ஊர்ஜிதம் செய்த லக்ஷ்மன் சாருக்கும் உரியது இந்த வெற்றி.
தற்போது தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்று இருப்பது எனக்கு மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது. தமிழ் திரை உலகில் இருந்து வரும் நடிகர்கள் பொதுவாக தெலுங்கில் நிலைப்பது இல்லை என்ற கூற்றை என் அடுத்தடுத்த படங்களின் கதை, மற்றும் மற்ற அம்சங்கள் பொய்யாக்கும் என்று நம்புகிறேன். இந்த வெற்றி ஒரு நடிகனாக என்னை இன்னமும் மேம்படுத்தி தென்னிந்தியாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வளம் வர வைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். என்கிறார் விஜய் ஆண்டனி.