ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
புலி, வேதாளம் படங்களை முடித்த பிறகு யாரா இந்தி படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், அதையடுத்து பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்துக்கொண்டே, சூர்யாவின் எஸ்-3 படத்திலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது இந்த இரண்டு படங்களிலும் ஸ்ருதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாம். அதையடுத்து எஸ்.ஜே.சூர்யா பவன் கல்யாணை வைத்து இயக்கும் படம், தனது தந்தை கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடிக்கிறார்.
ஆனால் இந்த இரண்டு படங்களில் பவன் கல்யாண் படம் ஜூன் 2-ந்தேதி தொடங்குகிறது. கமலின் சபாஷ் நாயுடு ஜூன்-3-ந்தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. என்றாலும், ஆரம்பத்தில் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்க திட்டமிட்டுள்ளாராம் ராஜீவ்குமார். அதனால், பவன் கல்யாணுடன் நடிக்கும் படத்தை முடித்த பிறகே அப்பா கமலுடன் இணைந்து நடிக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.