ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த பின்னர் இல்லற வாழ்க்கைக்கு சென்றதால் சினிமாவிற்கு சிலகாலம் முழுக்கு போட்டிருந்தார். சமீபத்தில் ஷாரூக்கானின் தில்வாலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானவர், மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தில்வாலே படத்தை தொடர்ந்து தன் கணவரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் கஜோல். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கஜோலுக்கு இப்போது கதை தேர்வு செய்வது சிரமமாக உள்ளதாம்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, ''இன்றைய சினிமா சூழலில் கதை தேர்வு செய்வது கொஞ்சம் சிரமமாகத்தான் உள்ளது. இன்றைக்கு சினிமாவில் நிறைய மாற்றம் வந்துவிட்டதால் சரியான கதையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அப்படி தேர்த்தெடுக்கும் கதைகளும் புதியவைதானா இல்லை பழைய கதையா என்ற குழப்பம் உள்ளது என்று கூறியுள்ளார்.