ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விசாரணை படத்திற்கு தேசிய விருது பெற்ற இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, வெற்றிவேல் படத்திற்கு பிறகு இப்போது தனது இயக்கத்தில் நடித்துள்ள படம் ''அப்பா''. அவரின் நடிப்பும் மற்றும் இயக்கமும் எல்லாரையும் விட வித்தியாசமாகவும் எல்லோரின் மனதையும் கவரும் வகையில் அமைந்து இருக்கும். அந்த வகையில் சமுத்திரகனி இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வந்து வெற்றி படமாக இருந்த சாட்டை படத்தின் இரண்டாம் பாகம் தான் '' அப்பா'' . இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப்படத்தின் இயக்கத்தை முடித்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு படங்களை சமுத்திரக்கனி இயக்கப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் ஒரு படத்தில் தனது நண்பர் மற்றும் நடிகரும் இயக்குனருமான சசிக்குமாரும், இரண்டாவது படத்தில் ஜெயம் ரவியும் நடிக்கப் போவதாகவும் சமுத்திரக்கனி கூறி உள்ளார். தற்போது அவர் இரண்டு சுயசரிதைகள் இயக்கப்போவதாகவும் அதில் ஒருப்படத்தில் மறைந்த விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றியும், மற்றொன்றில் மதுரை கலெக்டராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ் பற்றி எடுக்க இருப்பதாக தகவல் வெளியா உள்ளன. அந்தப்படத்தில் சமூத்திரகனி கலெக்டராக நடிக்கப்போவதாகவும் பேசப்படுகிறது. இந்த படங்களை எல்லாம் இயக்குனர் சமூத்திரகனி எப்போது எடுக்க போகிறார் என்றும், எந்தப்படம் முதலில் வரும் என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.