ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வெற்றி கண்ட அருண்குமார், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.அறிமுகப்படமான பண்ணையாரும் பத்மினியும் எதிர்பார்த்த அளவு ஓடாவில்லை. எனினும் அருண்குமார்-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான 2 வது படமான சேதுபதி படம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதனால் அருண்குமாரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியைத் தொடர்ந்து விஷாலை வைத்து அருண்குமார், படம் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவல்களை தற்போது இயக்குனர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் அதிரடி கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த கதையின் நாயகனாக இதுவரை நான் யாரையும் தேர்வு செய்யவில்லை. தற்போது இப்படம் குறித்த தகவல்களை என்னால் வெளியிடமுடியாது. இப்போதைக்கு இதுவொரு ஆக்ஷன் மற்றும் விறுவிறுப்பு கலந்த கதை என்பது மட்டும் உறுதி. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்" என தெரிவித்துள்ளார். இந்தப்படதிலும் விஜய் சேதுபதியா அல்லது விஷாலா என்பதை தொடர்ந்து சஸ்பென்சாக வைத்துள்ளார் டைரக்டர் அருண்குமார்.