ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யா நாயகனாக நடித்துள்ள '24' படம் மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட்டி 50 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். சூர்யாவே சொந்தமாகத் தயாரிப்பதால் அவருடைய சம்பளத்துடன் சேர்த்தால் பட்ஜெட் இன்னும் அதிகமாகும் என்கிறார்கள். இப்படம் 'டைம் மிஷின்' சம்பந்தப்பட்ட கதைதான் என்பதும் உறுதியாகியுள்ளது. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா தற்போது 'சிங்கம்' படத்தின் மூன்றாகம் பாகமான 'எஸ் 3' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதமோ அல்லது மே மாதத்திலோ முடிந்து விடும் என்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ள படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். திரிவிக்ரம் தற்போது இயக்கி வரும் 'அ ஆ' படம் மே மாதம் வெளியாகிறது. அதன் பின் திரிவிக்ரம், சூர்யா இருவருமே முதன் முறையாக இணையும் படத்தின் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். இப்படத்திற்கான பட்ஜெட் சுமார் 100 கோடி என டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு மொழிகளிலும் உருவாவதால் முதலீடு செய்யும் பணத்தை எடுக்க முடியும் என்கிறார்களாம். முதல் முறையாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்.