ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா படைப்புகளில் முக்கியமானது 'மூன்றாம் பிறை'. கமல் - ஸ்ரீதேவியின் அளப்பரிய நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இப்படம், கமலுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. ஸ்ரீதேவிக்கும் விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்படம் இந்தியிலும் சாத்மா என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டது. அதே பாலுமகேந்திரா இயக்கம், மற்றும் கமல்-ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான இப்படம் அங்கும் சூப்பர் ஹிட் அமைந்தது.
இந்நிலையில் சாத்மா படம் தற்போது மீண்டும் இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. லாய்டு இயக்க உள்ளார். தற்போது ஹீரோ, ஹீரோயின் தேர்வு நடந்து வரும் சூழ்நிலையில், இப்படத்தில் ஸ்ரீதேவி ரோலில் நடிக்க, நடிகை வித்யாபாலனிடம் கேட்டுள்ளார் லாய்டு. சமீபத்தில் இதுதொடர்பாக அவரை சந்தித்தும் பேசியுள்ளார். ஆனால் வித்யாபாலன் ஓகே சொல்லவில்லையாம். காரணம், சாத்மா ரோலில் ஸ்ரீதேவியை தவிர வேறு யாரும் கட்சிதமாக செய்ய முடியாது என்று அவர் கருதுகிறாராம். இருந்தாலும் வித்யாபாலனை இப்படத்தில் நடிக்க வைக்க தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது.