யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
சின்னத்திரை சேனல்களில் மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம், ஆபீஸ், தேவதை, பைரவி, பாசமலர், கைராசி குடும்பம் உள்பட ஏராளமான நெடுந்தொடர்களில் லீடு ரோல்களில் நடித்தவர் ஜீவிதா.
இவர் ஜெயம்ரவி -ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். அதைத் தொடர்ந்து பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் யுவன் மயில்சாமி நாயகனாக நடித்துள்ள என்று தணியும் என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் தனது வேடம் குறித்து ஜீவிதா கூறும்போது, என்று தணியும் படம் காதல் கதையில் உருவாகியிருக்கிறது. என்னதான், ஜாதி, மத பிரிவினைகள் குறைந்து கொண்டு வந்தபோதும், வேறு ஜாதியினரை காதலிக்கும்போது அதற்கு பலத்த எதிர்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் காதலிப்பவர்கள் கருணை கொலை செய்யப்படும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு கதாபாத்திரத்தில்தான் இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
இந்த படத்தின் நாயகன் யுவன் மயில்சாமியும், நானும் அக்கா-தம்பியாக நடிக்கிறோம். அவர் ஒரு பெண்ணை காதலிப்பார். அதேபோல் நானும் ஒருவரை காதலிப்பேன். நான் தாழ்த்தப்பட்ட ஜாதி இளைஞனை காதலிப்பதால் என்னை கொன்று விடுவார்கள். பல சீரியல்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் நான், இந்த படத்தில் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். எனக்கு மூன்று பாடல்களும் உள்ளது. இந்த படத்தை மார்ச் 4-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று கூறும் ஜீவிதா, இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ராஜேஷ். இவர் யுவன் மயில்சாமிக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க வந்தவர். அவரது நடிப்பைப்பார்த்து விட்டு இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் அவரையே எனக்கு ஜோடியாக்கி விட்டார் என்கிறார்.