ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வருகிற 15ந் தேதி முதல் ராஜ் டி.வியில் இந்திரா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. புகழ்பெற்ற இந்தி தொடரை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்திரா தொடர் மற்ற தொடர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. தொடரின் நாயகியான இந்திராவிற்கு சரியாக பேச வராது. திக்குவாய் பிரச்சினை உள்ளனர். இதனால் அவருக்கு திருமணம் நடக்காது. கடைசியில் ஒருவன் திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான். அந்த திருமணம் வரதட்சணை பிரச்சினையால் நின்று விடுகிறது. இதனால் வாழ்க்கையில் ஜெயித்து காட்ட வேண்டும் என்று கருதும் இந்திரா, ஒரு தொலைக்காடச்சியில் தொகுப்பாளினியாக வேலைக்குச் சேர்கிறார். திக்குவாய் பிரச்சினை உள்ளவர் எப்படி தொகுப்பாளினியாக ஜெயிக்கிறார். அந்த சேனல் முதலாளியின் மகனையே திருமணம் செய்கிற அளவிற்கு எப்படி வளர்கிறார் என்பதுதான் தொடரின் கதை.