ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் கல்பனா. நடிகை ஊர்வசியின் அக்காவான இவர் கே.பாக்யராஜ் இயக்கிய சின்னவீடு படம் மூலம் தமிழுக்கு வந்தார். முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து திருமதி ஒரு வெகுமதி, சிந்துநதிப்பூ, சதிலீலாவதி என ஏராளமான படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம்தான் தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்தது.
அதோடு, இட்லி என்ற படத்திலும் அவர் நடித்துக்கொண்டிருந்தார். அப்படத்தில் கோவை சரளா, கல்பனா, சரண்யா ஆகிய 3 பேரும் பாட்டிகளாக நடித்து வந்தனர். பெண்களுக்கு மெசேஜ் சொல்லும் வகையில் அந்த படம் உருவாகிக்கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமான சமீபத்தில் கல்பனா இறந்து விட்டதால் இட்லி படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பாதி படத்திற்கு மேல் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், கல்பனா வேடத்திற்கு வேறொரு நடிகையை புக் பண்ணி அந்த கேரக்டருக்கான மொத்த காட்சிகளை ரீ-ஷுட் பண்ணலாமா? இல்லை பாதிக்குப்பிறகு வேறொரு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்பது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம்.