ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இது நம்ம ஆளு' படத்தில் இன்னும் இரண்டு பாடல்களை எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என படத்தின் தயாரிப்புப் பக்கம் விடாப்பிடியாக இருக்கிறார்கள். அதற்காக படத்தின் நாயகியான நயன்தாராவிடம் கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நயன்தாரா ஏற்கெனவே பல நாட்கள் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டார்கள் அதனால் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். தற்போது இரண்டாவது கதாநாயகியாக நடித்து வரும் ஆன்ட்ரியாவை வைத்து ஒரு பாடலை மட்டும் படமாக்க இருக்கிறார்கள்.
அதே சமயம், படத்தில் ஒரு சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகாவைக் கேட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஹன்சிகா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன்னிடம் யாரும் கேட்வில்லை என்றும் அப்படி ஒரு செய்தி வெளியானதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம் மீண்டும் சிம்புவுடன் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு 'நோ கமெண்ட்ஸ்' என்று பதிலளித்தார்.
அரண்மனை 2' படத்தின் வெற்றி மூலம் இந்த ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து இரு கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் படங்கள் வந்தாலும் நடிக்கத் தயார்,” என்றும் அவர் தெரிவித்தார். ஜீவா ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ள 'போக்கிரி ராஜா' படம் இந்த மாதக் கடைசியில் வெளியாக உள்ளது.