ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ஜனவரி 14-ந்தேதி வெளியான படம் கதகளி. சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த பாயும்புலி அதிர்ச்சி தோல்வி கொடுத்ததால் இந்த படம் தனக்கு கைகொடுக்கும் என்ற எதிர்பார்த்தார் விஷால். ஆனால் இந்த படமும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இருப்பினும், தெலுங்கில் வெற்றி பெறும் என்று நம்புகிறாராம் விஷால்.
மேலும், தமிழில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும் வெளியிட வேண்டும் என்று முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால் தியேட்டர் பிரச்சினையால் ஒருவாரம் தள்ளி வைக்க முடிவெடுத்த நிலையில், கடந்த வாரம் அங்கு 4 தெலுங்கு படங்கள் ஒரே நாளில் வெளியானது. அதனால் ரிலீஸ் தேதியை வருகிற 12-ந்தேதிக்கு மாற்றி விட்டார்களாம்.
அதோடு, அப்பட நாயகி கேத்ரின் தெரசாவுக்கு தெலுங்கில் ஒரு ரசிகர் வட்டம் இருப்பதால் அதிகபட்சமாக 300 தியேட்டர்களில் கதகளியை வெளியிடும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம். தற்போதைய நிலவரப்படி 210 தியேட்டர்கள் ஓகேவாகி விட்டதாம். அதனால், பிப்ரவரி 12-ந்தேதி கதகளி ஆந்திராவில் வெளியாவது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.