ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயா, விஜய், ஜி தமிழ் என பல சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ராஜ்கமல். இவர் தற்போது சண்டிக்குதிரை என்ற படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் போன்று சினிமாவில் தானும் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக டிவி நிகழ்ச்சிகளில் தோன்றாமல், சினிமாவுக்காக தன்னை தயார்படுத்தி வந்த ராஜ்கமல், இந்த படத்தில் தனது பாடிலாங்குவேஜை கிராமத்து வேடத்துக்கேற்ப பக்காவாக மாற்றி தாடி வைத்த கெட்டப்பில் நடித்து வருகிறார்.
மேலும், இந்த சண்டிக்குதிரை படத்தை அன்புமதி தயாரித்து, இயக்குகிறார். நாயகியாக மானஸா என்ற மலையாள நடிகை நடித்து வருகிறார். இவர்களுடன் டெல்லி கணேஷ், சூர்யகாந்த் உள்பட சில முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள். புதுக்கோட்டை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் காதல், காமெடி மற்றும் சமூகத்துக்கு ஒரு மெசேஜ் சொல்லக்கூடிய கதையில் தயாராகிறதாம். குறிப்பாக, ஹீரோ-ஹீரோயின் சம்பந்தப்பட்ட லவ் ட்ராக்கே இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் நடந்தபோது, ஒரு காட்சியில் காதலை உள்வாங்கி நடித்த ராஜ்கமல், ஹீரோயின் கன்னத்தில் முத்தம் கொடுப்பதற்கு பதிலாக அவரது உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்து விட்டாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத மானஸா, அவர் தன்னிடம் ஏதோ தவறான நோக்கத்தில் செயல்படுவதாக எண்ணி கோபத்தில் அவரது கன்னத்தில் பளார் என்று அடித்து விட்டாராம். இதனால் ராஜ்கமல் மட்டுமின்றி டைரக்டர் அன்புமதி உள்பட அனைவருமே பலத்த அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். அதோடு, நாயகி மானஸா கோபத்துடன் கேரவனுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாராம்.
கதைப்படி, ஹீரோ- ஹீரோயினிக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதுதான் காட்சி என்றபோதும், உதட்டில் முத்தம் கொடுத்தால் இன்னும் காட்சி தத்ரூபமாக வருமே என்பதற்காக முன்கூட்டியே டைரக்டர் சொல்லாத விசயத்தை தானாக செய்து விட்டாராம் ராஜ்கமல். இதனால் பின்னர், மானஸாவிடம் நடந்த தவறுக்கு ஸாரி கேட்கப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்ததாம். இந்த பிரச்னை காரணமாக இரண்டு மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாம்.
இதுபற்றி சண்டிக்குதிரை இயக்குனர் அன்புமதி கூறுகையில், சண்டிக்குதிரை ஒரு உயிரோட்டமான காதல் கதை. உதட்டு முத்தம் வைக்கிற அளவுக்கு காட்சி இல்லைதான். ஆனாலும் காட்சி நன்றாக வரவேண்டுமே என்பதற்காக ராஜ்கமல் உணர்ச்சிவசப்பட்டு விட்டார் அவ்வளவுதான். அதை பின்னர் நானும் மானஸாவிடம் சொல்லி புரிய வைத்தபிறகு அவர் கேரவனை விட்டு வெளியே வந்து மீண்டும் அந்த முத்தக்காட்சியில் நடித்துக்கொடுத்தார். அதோடு, அடுத்த நாளே மீண்டும் ராஜ்கமல்-மானஸா இருவரும் நண்பர்களாகி விட்டனர் என்கிறார்.