ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இசையமைப்பாளரானவர் சுந்தர் சிபாபு. அந்த படத்தில் அவரது இசையில் உருவான வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் -என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து அஞ்சாதே, நாடோடிகள், சிந்து சமவெளி, விருதகிரி, போராளி என பல படங்களுக்கு இசையமைத்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அவரது தாயார் இறந்து விட்டதை அடுத்து அவர் எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை.
ஆனால் சில வருடங்களுக்குப்பிறகு தனக்கு பிரிநிதா என்ற மகள் பிறந்ததை அடுத்து, என் அம்மாவே பிறந்து வந்தது போல் உள்ளது என்று உற்சாக மடைந்து மீண்டும் அட்டி படத்திலிருந்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கி விட்டார். இந்த படத்தில் அவரது பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியிருப்பதால் மேலும் சில புதிய படங்களுக்கு இசையமைக்கவும் பேசிக்கொண்டிருக்கும் சுந்தர் சி பாபு, அட்டி படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, அந்த படத்தை தானே வாங்கியும் வெளியிடுகிறார்.