ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் கோ. அந்த படத்தில் அவர் பத்திரிகை புகைப்பட கலைஞராக நடித்திருந்தார். அதையடுத்து இப்போது உருவாகியுள்ள கோ-2 படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சேனல் நிருபராக நடித்துள்ளார். கதைப்படி, அரசியல்வாதியாக நடித்துள்ள பிரகாஷ்ராஜின் சில தில்லுமுல்லுக்களை அவர் ரகசியமாக படம் பிடித்து சேனலில் வெளியிட மிகப்பெரிய சர்ச்சையாகி விடுவதுதான் கதையாம்.
இதையடுத்து பிரகாஷ்ராஜ் அவரை டார்க்கெட் பண்ண, அடுத்தடுத்து நடக்கும் வில்லங்கம்தான் இந்த கோ-2 படமாம். ஆக, முதல்பாதியில் ஜாலியாக செல்லும் இந்த படம் பிற்பாதியில் அதிரடியாக இருக்குமாம். இன்றைய தருவாயில் துணிச்சலாக செயல்படும் ஒரு சேனல் நிருபருக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை சொல்லியிருக்கிறார்களாம். அதோடு, பிரகாஷ்ராஜூடன் பாபி சிம்ஹா மோதும் காட்சிகளில் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளதாம். அவருடன் நடித்த அனுபவங்களை சிலிர்ப்புடன் தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் பாபிசிம்ஹா.