ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில வருடங்களுக்கு முன்பு பிசி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் விமல்.
சரியான படங்களை தேர்வு செய்யாததினால் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன.
இன்னொரு பக்கம், சின்ன கம்பெனி படங்களில் நடித்ததும் அவருக்கு ஆபத்தாகிவிட்டது.
விமல் நடித்த பல படங்கள் ரிலீஸ் அன்று மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க ஆரம்பித்தன.
ஜன்னலோரம் என்ற படத்தில் வேறு பல ஹீரோக்கள் இருந்தும், அப்படத்தின் ரிலீஸ் அன்று சுமார் 80 லட்சம் கொடுத்தார் விமல்.
அவர் பணம் தரவில்லை என்றால் அந்தப்படம் ரிலீஸ் ஆகாது என்ற நிலையில் பணம் கொடுத்து உதவினார். அதோடு தன் சம்பளம் 50 லட்சத்தையும் இழந்தார்.
இப்படியாக சம்பாதித்த பணத்தையும் இழந்த விமல் ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்தார்.
இப்போதைய அவரது நம்பிக்கை மாப்ள சிங்கம் மற்றும் அஞ்சல படங்கள்தான்.
மாப்ள சிங்கம் சென்சார் ஆகி அறு மாதங்களுக்கு மேலாகிறது.
பசங்க-2 படத்தை வாங்கி வெளியிட்ட கையோடு மாப்ள சிங்கம் படத்தை ரிலீஸ் செய்ய தயாரானார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்.
இதற்கிடையில் விமல் நடித்த அஞ்சல படமும் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி இருந்தது.
இம்மாதம் வெளி வந்ததிருக்க வேண்டிய மாப்ள சிங்கம், தற்போது அஞ்சல படத்துக்காக வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறது.
அஞ்சல பிப்ரவரி 19 அன்று திரைக்கு வருகிறது. இரண்டு வாரங்கள் கழித்து மாப்ள சிங்கம் வருகிறதாம்.