ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 2002ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டி, சாலையொரத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சல்மான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சல்மான் கானுக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் சல்மான். இதில், சல்மானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் சல்மான் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. வழக்கை வரும் 12ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.