ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் |
'வாணி ராணி' தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். அதையடுத்து இப்போது என் இனிய தோழி, தாமரை, கேளடி கண்மணி, பிரியசகி போன்ற சீரியல்களில் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்து வருகிறார். அவரிடத்தில், இன்னும் எந்தமாதிரியான வேடங்களில் எல்லாம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டபோது,
இதுவரை ஹீரோ, வில்லன், குணசித்ர வேடம் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். அதில் பல கேரக்டர்கள் நேயர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. எனக்கும் திருப்தியாக அமைந்திருக்கிறது. என்றாலும், மாற்றுத்திறனாளி வேடங்களில் அடுத்தடுத்து நடிக்க வேண்டும். வித்தியாசமான பர்பாமென்ஸை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை எனக்குள் உள்ளது.
குறிப்பாக, கண் பார்வை இல்லாத வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த கதாபாத்திரத்தின் மூலம் அவர்களது உலகத்திற்குள் சென்று இயல்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். மேலும், நான் ஒரு பெயின்டரும்கூட. அந்த வகையில், கண்பார்வையில்லாத ஒரு மாற்றுத்திறனாளியின் ஓவியம் வரைந்து அதற்கு பரிசு பெற்றிருக்கிறேன். அப்போது நான் நேரில் பார்த்த கண்பார்வை இல்லாதவர்களை மனதில் கொண்டு வந்து, தத்ரூபமாக அந்த படத்தை வரைந்தேன்.
அதனால், அப்படியொரு வேடத்தில் நடிக்கிறபோது என்னால், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ரோலுக்கு உயிர் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று கூறும் ஜெயராம், சேலஞ்சிங்கான வேடங்களிலும் நடித்து சின்னத்திரை உலகில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவதாக கூறுகிறார்.