ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு மூன்று வாரம் முடியப் போகிறது. மக்களுக்கு ஆதரவாக அதிக அளவில் தன்னார்வலர்கள் மட்டுமே உதவி செய்து மக்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார்கள். இந்த மக்களில் ஒரு அங்கமாக இருக்கும் சில நடிகர்களின் ரசிகர்கள் கூட பாதிக்கப்பட்டார்கள். தங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் அவர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்த இந்த ரசிகர்கள் நான்கைந்து நாட்களுக்கு அந்த பால் இல்லாமல் ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கூட தவித்தார்கள். அந்த பால் அபிஷேகத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளவர்கள் இரண்டு நடிகர்கள் ஒருவர் விஜய், மற்றொருவர் அஜித். இவர்களிருவரும் பாதிக்கப்பட்ட தங்களது ரசிகர்களுக்காகக் கூட மனமுவந்து இதுவரை சில லட்சங்களைக் கூட நன்கொடையாக அள்ளித் தராமல் அமைதி காத்து வருவது இவர்களின் ரசிகர்களிடம் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் 2 கோடி, ஹிந்தி நடிகர்களான அக்ஷய் குமார், ஷாரூக் கான் 1 கோடி, ஹிருத்திக் ரோஷன் 25 லட்சம் வழங்கியுள்ள நிலையில் விஜய்யும், அஜித்தும் ரஜினி, கமல்ஹாசனைப் போல அந்த சில லட்சங்களையும் கூட அறிவிக்காமல் இருப்பது ஏனோ ?.
அஜித் கால் ஆபரேஷன் செய்து வீட்டில் ஓய்வில் இருக்கிறார் சரி. நிவாரணத் தொகையை நேரில் வந்துதான் தர வேண்டும் என்பதில்லையே, அதற்கான அறிவிப்பை வெளியிடக் கூட என்ன தயக்கம்?. விஜய் 'தெறி' படத்திற்காக கோவாவில் இருந்தார் அதனால் வர முடியவில்லை என்றார்கள். மும்பை, புனா, டெல்லியில் இருப்பவர்கள் கூட பெங்களூர் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்து தங்கள் நண்பர்களையும், உறவினர்களையும் காப்பாற்ற முயன்றார்கள். விஜய்க்கு அப்படி வரும் வழி தெரியாதா என்ன?.
ஹீரோயிசத்தால் மட்டுமே சினிமாவில் வளர்ந்த விஜய்க்கும், அஜித்துக்கும் அந்த ஹீரோயிசம் நிஜ வாழ்வில் வராமல் போனது ஏன்?. கடந்த வாரத்துடன் நடிகர்களின் வெள்ள நிவாரண உதவி பற்றிய செய்தி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இன்னமும் காலம் கடந்துவிடவில்லை, இனியாவது தமிழ் மக்கள் மீதும், உங்களது ரசிகர்கள் மீதும் உண்மையிலேயே அன்பும், பாசமும் இருந்தால் அவர்களின் நல்வாழ்வுக்காக நீங்கள் எதையாவது செய்ய வருவீர்கள் என்று திரையில் மட்டும் உங்களைக் கொண்டாடாமல், நிஜ வாழ்விலும் உங்களைக் கொண்டாடி வரும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனாலும், அதையும் மீறி பாலுக்கும், தண்ணீருக்கும் தவித்தவர்கள் உங்கள் படங்கள் வெளிவரும் போது மீண்டும் பால் அபிஷேகத்திற்கு வருவார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.... அவர்களின் வலி இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் மறையாது.