ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிதீர்த்த கனமழையில் இந்த மாவட்டங்கள் எல்லாம் சின்னாபின்னமாகியுள்ளது. அதிலும் கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்கள் நிலைகுலைந்து போய் இருக்கிறது. தலைநகர் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பு இந்தியாவையும் தாண்டி உலகளவில் எதிரொலிக்கிறது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், நடிகர்கள், மக்கள் என பலரும் உதவி வருகின்றனர். பலர் சென்னையை காப்பாற்று இறைவா என்று வேண்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தி நடிகர் ஷாரூக்கானும் சென்னை மக்களுக்காக இறைவனை வேண்டுவதாக கூறியுள்ளார்.
ஷாரூக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... சென்னையில் எனது சகோதர, சகோதரிகள் வசிக்கிறார்கள். இயற்கையின் பேரிடரால் சென்னை பாதிக்கப்பட்டுள்ளது. இதை பேரிடரை எதிர்த்து போராடும் மன பலத்தை ஆண்டவன் தர வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.