விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
மாங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதோடு, அவரது சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டதால், அதே ரூட்டில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் அஜித், எந்த கதையையும் ஒரு சிட்டிங்கிலேயே ஓகே செய்யாமல், அதுபற்றி விவாதம் செய்து பிறகுதான் அந்த கதையில் நடிக்கவா? வேண்டாமா? என்ற முடிவுக்கு வருகிறார். அதன்காரணமாக ஒரு கதையை ஓகே செய்வதற்காக அவர் 20, 30 கதைகள் வரை கேட்கிறார்.
அதனால், இப்போது அஜித் நடிக்கும் எல்லா படங்களுமே வெற்றி பெற்று வருகின்றன. குறிப்பாக ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற கோணத்திலேயே கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வரும் அஜித், என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடித்த வேதாளம் படம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய வசூலை கொடுத்தது. இப்போதுவரை பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காடசிகளாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்தநிலையில், திருநெல்வேலியில் உள்ள தியேட்டர் ஒன்றில் வேதாளம் மிகப்பெரிய வசூலை கொடுத்துள்ளதாம். இந்தசேதியை வெளியிட்டுள்ள அந்த தியேட்டர் உரிமையாளர் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், கடந்த 29-ந்தேதி அன்று காலை 8 மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெசல் காட்சி போட்டு காண்பித்திருக்கிறார். அந்த காட்சியை முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பது போன்ற உற்சாகத்துடன் அஜித் ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.