ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நேரம், ஜிகர்தண்டா படங்களில் அதிரடி வேடத்தில் நடித்தவர் பாபி சிம்ஹா. பின்னர் அவர் வில்லனில் இருந்து ஹீரோவாக ப்ரமோஷனாகி விட்டார். அவரது கைவசம் உருமீன், இறைவி, கோ-2, பாம்பு சட்டை, வல்லவனுக்கு வல்லவன் உள்பட பல படங்கள் உள்ளன். இபபடி அவர் ஒரே நேரத்தில் நிறைய படங்களில் நடிப்பதால் கால்சீட் பிரச்சினையிலும் சிக்கியிருக்கிறார். இதனால், பாம்புசட்டை, உருமீன் படங்களுக்கு அவரை டப்பிங் பேச வைப்பதற்காக மாதக்கணக்கில் காத்திருந்தனர். அதையடுத்து வேறு படங்களில் நடித்துக்கொண்டே மதிய நேரங்க ளில் ஓரிரு மணி நேரங்கள் பேசி வந்த பாபி சிம்ஹா தற்போது பாம்பு சட்டை, உருமீன், கோ-2 போன்ற படங்களை முடித்துக்கொடுத்து விட்டார். அடுத்தடுத்து இந்த படங்கள் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடித்து வெளியான மசாலா படம் தோல்வியடைந்ததால், தற்போது தான் புதிதாக கேட்கும் கதைகளை ரொம்பவே ஆராய்கிறார் பாபி சிம்ஹா. கமர்சியல் கதைகள் என்பதே பாலிஸியாக வைத்திருந்தபோதும், அதற்குள்ளும் ஏதாவது ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்று பிரியப்படுகிறாராம் அவர். அதனால் டைரக்டர்கள் சொல்லும் கதை தனக்கு பிடித்து விடும் பட்சத்தில் இந்த கதைக்குள் ஏதாவது ஒரு நல்ல கருத்தினையும் கலந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்புகிறாராம். இப்படி திடுதிப்பென்று கருத்து கந்தசாமியாக பாபி சிம்ஹா மாறியதை அடுத்து அவரை வைத்து தற்போது படம் இயக்கி வருபவர்கள்கூட கதைக்குள் எக்ஸ்ட்ராவாக காட்சிகளை இணைத்து அதன்மூலம் ஏதேனும் சமுதாய கருத்தினை சொல்லி வருகிறார்களாம்.