அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சந்தானம் ஹீரோவான பிறகு சூரியின் காமெடி காட்டில்தான் அடமழை கொட்டுகிறது. அதன்காரணமாக, அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களெல்லாம் சூரிக்கு பின்னால் அணிவகுத்தன. அதனால் கைவசம் ஒரு டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கும் அவர் ஒருநாள் கூட ஓய்வில்லாமல் நடிப்பது, டப்பிங் பேசுவது என பரபரவென இயங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் இப்படி சூரியின் கால்சீட் டைரி புல்லாக இருப்பதால் சில படங்களுக்கு அவரது கால்சீட் கிடைக்காமல் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி செல்பவர்கள் அவருக்குப் பதிலாக மொட்டை ராஜேந்திரன் மாதிரியான காமெடியன்களை நோக்கி செல்லாமல், வாய் மூடி பேசவும், மாரி, மய்யம் போன்ற படங்களில் காமெடியனாக நடித்த ரோபோ சங்கரை நாடி வருகின்றனர்.
காரணம், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள ரோபோ சங்கர், காமெடி காட்சிகளில் நிறைய ஹோம் ஒர்க் செய்து நடிக்கிறாராம். அதோடு, அவரது சம்பளம் பெரிதாக உயரவில்லை. அவர் இன்னும் பிசியான காமெடியன் ஆகவில்லை என்பதால் கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுக்கிறாராம். இதன்காரணமாக, மன்னர் வகையறா படத்தில் விமலுடன் சூரியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த பூபதி பாண்டியன், அவருக்கு பதிலாக இப்போது ரோபோ சங்கரை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்கு முன்பு, தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை ஆகிய படங்களை இயக்கிய பூபதி பாண்டியன், இந்த படத்தை பக்கா காமெடி கலந்த கதையில் இயக்குகிறார். அதனால் ரோபோ சங்கருக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.