ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சகிப்பின்மை விவகாரத்தில் விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியிருக்கிறார். சகிப்பின்மை மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் நாளுக்குநாள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான போராட்டங்களும் நாட்டில் அதிகரித்துக் கொண்டுள்ளன.
சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்த விவகாரத்தில் தங்களை கருத்துக்களை வெளியிட அது பெரிய பிரச்சினையாக மாறி மிகப்பெரிய வாதங்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில் சகிப்புத்தன்மை விவகாரத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். "சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை .மேலும் அதுபோன்ற நிலைமை இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.