ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை அடையாறில் சமந்தா படித்து வந்த காலகட்டத்தில் இருந்தே அவருக்கு நிறைய தோழிகள் உண்டு. அதேபோல் ஐதராபாத்திலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவருடன் பழகி இப்போது சென்னையைப்போலவே அங்கும் அவருக்கு ஒரு நட்பு வட்டாரம் உருவாகியிருக்கிறதாம். அதனால் அவர் எப்போது வீட்டில் ஓய்வாக இருந்தாலும், அவரை காண ஒரு பெரும் தோழிகள் கூட்டம் கூடி விடுமாம். அதனால் அவர்களுடன் நேரம் போவதே தெரியாமல் ஜாலி அரட்டையில் இறங்கி விடுவாராம் சமந்தா. இது அவரது ஐதராபாத் இல்லத்தில் அடிக்கடி நடக்குமாம்.
ஆனால், அஞ்சான் படத்திற்கு பிறகு அவர் சென்னைக்கு வந்து விட்டதால், ஆந்திர தோழிகளை ரொம்பவே மிஸ் பண்ணுகிறாராம். காரணம், தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அரட்டை அரங்கத்திற்கு அவருக்கு போதிய நேரமே கிடைப்பதில்லையாம். அதனால் நாளடைவில் சமந்தாவை தோழிகள் தொடர்பு கொள்வதே குறைந்து விட்டதாம். இந்த நிலையில், தற்போது சமந்தாவிற்கு சில வெளிநாட்டு தோழிகள் கிடைத்திருக்கிறார்களாம். அதனால் தான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் கிடைக்கும் சில நாள் இடைவெளியில் தனது பெற்றோருடன் வெளிநாடுகளுக்கு டூர் அடிக்கிறார் சமந்தா. அப்போது அங்குள்ள தோழிகளையும் சந்தித்து மகிழ்கிறாராம்.