ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா இருவரும் எந்த அளவிற்கு காதலித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த உலகம் அறியும். கோயிலுக்குச் சென்று ஒன்றாக பூஜைகள் நடத்தும் அளவிற்கு இருந்தார்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இருவரும் பிரிந்துவிட்டார்கள். பெங்களூரு டேய்ஸ் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் இருவரும் நடிப்பதாகக் கூடச் சொன்னார்கள். அதற்குள் ஏதோ ஒரு கலகம் அவர்களைப் பிரித்துவிட்டதாகவே தெரிகிறது.
இதனிடையே, நேற்று இரவு சித்தார்த் அவருடைய டிவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் “எனக்கு ஒரு மோசனமான விஷயம் நடந்துச்சின்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனால், ஒரு தருணத்துலதான் அப்படி நடந்தது மிகப் பெரிய நல்ல விஷயம்னு எனக்குப் புரிஞ்சுது,” என யாருக்கோ எதையோ சொல்வது போல போட்டிருந்தார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் நடிகை சமந்தா அவருடைய டிவிட்டரில் இப்படி ஒரு பதிவைப் போட்டு பிறகு நீக்கிவிட்டார். சமந்தா பதிவிட்டு நீக்கிய பதிவு இதுதான், “அந்த ஒரு தருணத்துலதான் நீ எனக்கு யாரோ ஒருத்தன்தான்கறது புரிஞ்சுது,”எனக் குறிப்பிட்டிருந்தார்.
காதல் சண்டைகளுக்கும், மோதல்களுக்கும் கூட சமூக வலைத்தளங்கள்தான் தற்போது பெரிதும் உதவி வருகின்றன. அதிலிருந்து நடிகர், நடிகைகளும் கூட தப்பவில்லை என்பது சாமானிய ரசிகர்களுக்கும் இப்போது புரிந்திருக்கும்.
பாழாய்ப் போன இந்தக் காதல்...என்னவெல்லாம் செய்கிறது...டிவிட்டர் வரை கொண்டுவந்துவிட்டதே....!