ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தேசிய ஊடகங்கள் என்றாலே அது வட இந்திய ஊடகங்கள்தான் என்று குறிப்பிடுமளவிற்கு சிலர் பேசி வருகிறார்கள். தென்னிந்தியாவில் என்ன நடந்தாலும் அதைப் பற்றி கண்டு கொள்ளாத வட இந்திய ஊடகங்கள், வட இந்தியாவில் ஏதாவது ஒரு சிறு விஷயம் நடந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்குகின்றன என்ற எண்ணம் தென்னிந்திய மக்களிடையே எப்போதும் உண்டு. கடந்த இரண்டு வார காலமாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் மழையால் ஏற்பட்ட சேதங்களைப் பற்றியும், இங்குள்ள மக்களின் நிலையைப் பற்றியும் எந்த ஒரு வட இந்திய ஊடகமும் கண்டு கொள்ளவில்லை.
ஆமீர்கான் சகிப்புத் தன்மையின்மை பற்றிய பேச்சு கடந்த சில நாட்களாக வட இந்திய ஊடகங்களில் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்துள்ளது. தமிழ்நாட்டு மழையைப் பற்றி செய்தி வெளியிடாத அந்த தேசிய ஊடகங்கள் மீது தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் சித்தார்த். “அன்புள்ள தேசிய ஊடகங்களே, சென்னை, தமிழ்நாடு, வெள்ளம், பாதிக்கப்பட்டுள்ளோம், இந்தியாவின் ஒரு பகுதி, ஆமீர், ஷீனா ஆகியவற்றை விட மிக முக்கியமானது. எங்களையும் பாருங்கள், இப்போதாவது பேசுங்கள்,” என பதிவிட்டுள்ளார். சினிமாவைத் தவிர பல்வேறு விஷயங்களிலும் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்து வரும் சித்தார்த், தேசிய ஊடகங்களைப் பற்றி இப்படிக் கேள்வி எழுப்பியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.