காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
எஸ்.தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் தலைப்பும், முதல் பார்வையும் நேற்று வெளியிடப்பட்டது. தலைப்பு வெளியான கொஞ்ச நேரத்துக்குள்ளாகவே தலைப்பு பற்றிய சர்ச்சையும் ஆரம்பமாகிவிட்டது.
'தெறி' என்ற தலைப்பில் ஏற்கெனவே சதீஷ்குமார் என்ற இளம் இயக்குனர் பட விளம்பரத்தை செப்டம்பர் 1ம் தேதியே வெளியிட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. அது குறித்து தன்னுடைய முகப்புத்தகத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “என் படத்தின் பெயர் 'தெறி' வேறு ஒரு தயாரிப்பாளரால் வேறு படத்துக்கு எடுக்கப்பட்டுவிட்டது. கேட்டால் ஆயிரம் காரணம் சொல்றாங்க, இந்த பொழப்புக்கு....
நான் யோசிச்சி என் படத்துக்கு பேர் 'தெறி'ன்னு மூணு மாசம் முன்னாடியே வைப்பேனாம், பெயர் ரிஜிஸ்டரும் செய்வேனாம். ஆனால், ரிஜிஸ்டர் புக் அவங்ககிட்ட இருக்குதுன்றதுக்கு என் படப் பெயரை அவர் படத்துக்கு தூக்கி வச்சிப்பாராம், அதுவும் அனுமதி இல்லாம. அவங்க ஏற்கெனவே ரிஜிஸ்டர் பண்ண மாதிரி ரிஜிஸ்டர் புக்ல பக்கத்தை மாத்திப்பாங்களாம். இதுக்காக அவங்க கூட நான் சண்டை போட மாட்டேன், ஆனால், கேட்டால் நானே கொடுத்திருப்பேனே,” எனப் பதிவு செய்திருக்கிறார்.
செப்டம்பர் மாதம் 1ம் தேதியே அவர் 'தெறி' என்ற பெருடன் விளம்பர டிசைன் ஒன்றையும் அவருடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த சமயத்தில் “என்னுடைய முதல் தமிழ்ப் படமான 'தெறி' படத்தைப் பற்றி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய படத்தின் முதல் பார்வை இதோ, அக்டோபர் மாதம் முதல் ஷுட்டிங் 'தெறி'க்கும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று மாலை முதல் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இது பற்றிய காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக கதை காப்பியடிப்பதை விட தலைப்பை காப்பியடிப்பதுதான் அதிகமாக நடந்து வருகிறது. இளம் இயக்குனர் சதீஷ்குமாருக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.