ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆதித்யா சேனலில் டாடி எனக்கொரு டவுட்டு என்ற நிகழ்ச்சியை டவுட் செந்திலுடன் இணைந்து வழங்கி வந்தவர் திண்டுக்கல் சரவணன். தற்போது அதே கூட்டணி நய்யாண்டி நேரம் என்றொரு நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்கள். அதையடுத்து விரைவில், ''பாக்கதான் புதுசு பக்கா பழசு'' என்றொரு நிகழ்ச்சியை வழங்கப்போகிறார் திண்டுக்கல் சரவணன்.
அந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறுகையில், டாடி எனக்கொரு டவுட்டு நிகழ்ச்சியில் செந்தில் என்னிடம் ஏதாவது ஒரு டவுட் கேட்டுக்கொண்டேயிருப்பார். அதற்கு நான் சொல்லும் பதில் தவறாக இருக்கும்பட்சத்தில் எனது வயிற்றில் கும்மு கும்மு என்று குத்துவார். அந்த நிகழ்ச்சி உலகமெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் மத்தியில் ரொம்ப பிரபலம். தமிழ்நாடு மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா என எந்த நாடுகளுக்கு சென்றாலும் எங்களை வரவேற்கிறார்கள். அந்த ஒரே நிகழ்ச்சி எங்களை பெரிய அளவில் பிரபலப்படுத்தி விட்டது. அதையடுத்து, இப்போது ஒரு நய்யாண்டி நிகழ்ச்சியை வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில், ''பாக்கதான் புதுசு பக்கா பழசு'' என்றொரு புதுமையான நிகழ்ச்சியை வழங்க தயாராகிக்கொண்டிருக்கிறேன். அடுத்த மாதம் முதல் அந்த நிகழ்ச்சி ஆதித்யா சேனலில் ஒளிபரப்பாகிறது. என்னதான் நாகரீகம் வளர்ந்து நின்றாலும், இப்போதும் நாம் பழைய வாழ்க்கையைத்தான் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நகைச்சுவையாக சொல்லும் நிகழ்ச்சி அது.
உதாரணத்திற்கு இப்போது பைக், கார் என்று வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களும் உடல் ஆரோக்கியத்திற்காக, நடை பயிற்சி, சைக்கில் ஓட்டுகிறார்கள். அந்த வகையில், நம்மால் பழைய வாழ்க்கையில் இருந்து விடுபட முடியவில்லை. நாம் ஆசைபட்டாலும் சூழ்நிலை நம்மை விடவில்லை என்பதை மையமாகக்கொண்டு அந்த நிகழ்ச்சி உருவாகியுள்ளது. இப்படி வாரம் ஒரு எபிசோடில் இன்றைய மனிதனின் மாறுபட்ட வாழ்க்கையையும், எப்படி பழமையில் இருந்து விடுபட முடியாமல் அதை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லப்போகிறேன்.
இது காமெடி மட்டுமின்றி கருத்துள்ள நிகழ்ச்சியாகவும் இருக்கும் என்று சொல்லும் திண்டுக்கல் சரவணன், டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சியை போல் வசனம் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், இதை லைவ்வாக நடித்தே காட்டப்போகிறேன். அதனால் இந்த நிகழ்ச்சியை நேயர்கள் அதிகமாக விரும்பிப்பார்ப்பார்கள் என்கிறார்.