ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சித்தியுடனான பிரச்சினைக்குப்பிறகு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கு சென்று விட்ட அஞ்சலி, சிலகாலம் கோடம்பாக்கத்துக்கே வராமல் இருந்தார். பின்னர் சிங்கம்-2 படத்தில் சூர்யாவுடன் குத்துப்பாட்டுக்கு ஆடியபடி மறுபடியும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் மறுபிரவேசத்தில் குத்தாட்டமாடியபடி வந்த அஞ்சலி, ஜெயம்ரவியுடன் நடித்த சகலகலா வல்லவன் அப்பாடக்கர் படத்தில் கிராமத்து வேடத்தில் தோன்றி முடிந்தவரை கவர்ச்சி காட்டினார்.
அதைப்பார்த்து அஞ்சலியின் இரண்டாவது ரவுண்டு படுபயங்கரமாக இருக்கப்போகிறது என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் மாப்ள சிங்கத்தை முடித்து விட்டு இறைவி படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விஜயசேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இப்படத்தில் அஞ்சலிக்கு இதுவரை நடிக்காத அளவுக்கு வித்தியாசமான வேடமாம். அதனால் இதன்பிறகு நல்லதொரு பர்பாமென்ஸ் நடிகை என்கிற முத்திரை தன்மீது விழும் என்ற நம்பிக்கையில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், முன்பு சென்னையில் குடியிருந்த அவர், இப்போது ஐதராபாத்தில் குடியிருப்பதால் படப்பிடிப்பு முடிந்தால் அன்று இரவே விமானத்தில் பறந்து விடுகிறார். ஆனால், அங்கு சென்றபிறகு அவருக்கு எப்போது போன் செய்தாலும் போன் சுவிட் ஆபில் இருப்பதாகவே தகவல் வருகிறதாம். அதனால், அடுத்தமுறை அவர் சென்னை வரும்போது, போன் பண்ணினால் லைனே கிடைக்கவில்லையே. அமெரிக்கா போய் விட்டீர்களா? என்று இங்கிருப்பவர்கள் கிண்டலாக கேட்கிறார்களாம்.
அதைக்கேட்டு டென்சன் ஆகிறாராம் அஞ்சலி. நான் ஆந்திராவில் இருக்கும்போதே அங்குள்ளவர்கள் நான் அமெரிக்கா பாய் ப்ரண்டை பார்க்கப்போயிருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். அவர்களைப்பார்த்து இப்போது நீங்களும் கெட்டுப்போய் விட்டீர்கள் என்கிறாராம். மேலும், எனக்கு அமெரிக்காவில் எந்த பாய் ப்ரண்டும் இல்லை. நான் அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதுமில்லை. இல்லாத ஒரு நபரை இருப்பதாக சொல்லி என் இமேஜை கெடுத்து விட்டார்கள் என்று சொல்லி கண்கலங்குகிறாராம் அஞ்சலி.