ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும், இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று விஷால் திட்டவட்டமாக கூறியுள்ளார். மதுரையில் நாடகர் நடிகர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பொய்யான குற்றச்சாட்டுகளை நான் கூறி வருவதாக சரத்குமார் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டு எதையும் நான் கூறவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரங்கள் உள்ளது. என்னை நாய், அவன் இவன் என்றெல்லாம் திட்டினார்கள். அதற்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. எனக்கு யார் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. அப்படி விரோதம் இருந்தால் எனக்காக எதற்கு இவ்வளவு நடிகர்கள், நாடக நடிகர்கள் ஒன்று திரள வேண்டும்.
ஜனநாயக முறைப்படித்தான் தேர்தல் நடக்கிறது. அப்படி இருக்கையில் எதற்காக எதிரணியினர் பயப்பட வேண்டும். என்னைப்பொறுத்தவரை கலைஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், சங்க கட்டடம் வர வேண்டும் அவ்வளவு தான். நடிகர் சங்க தேர்தல் நிச்சயம் நடைபெறும் என்றும், இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு விஷால் கூறினார்.