ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி பட உலகின், பிரபல இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயின், 71, காலமானார். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், மும்பை, லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று, அவரது உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்ததை அடுத்து காலமானார். அவருக்கு, திவ்யா ஜெயின் என்ற மனைவியும், ஆயுஷ் என்ற மகனும் உள்ளனர்.
பார்வையற்ற ரவீந்திர ஜெயின், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என, பன்முக திறமைகளுடன் விளங்கினார். பின்னணி பாடகர் ஜேசுதாஸை, இந்தியில் அறிமுகப்படுத்தியவர். சோர் மச்சாயே சோர், கீத் காதாத் சல், சிட்சோர் உட்பட பிரபல இந்தி படங்களில், தேனிசைப் பாடல்களை தந்து, இசைப்பிரியர்களின் செவிகளை குளிர வைத்தவர்.
நெடிய இசைப் பயணத்தின் நடுவே, சற்று இளைப்பாறியவரை, ராஜ்கபூரின், ராம் தேரி கங்கா மேலி படம் மீண்டும், சுறுசுறுப்பாக்கி, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ஏராளமான திரைப்படங்கள், டிவி தொடர்கள், பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார்.
ரவீந்திர ஜெயின் மறைவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.