ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யுடன் நடித்த ஜில்லாவுக்கு பிறகு அதிரடியாக சம்பளத்தை உயர்த்தி படங்களே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட காஜல் அகர்வால், பின்னர் சம்பளத்தை கணிசமான அளவு குறைத்து மாரி, பாயும் புலி போன்ற படங்களை கைப்பற்றினார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே அவருக்கு பெரிதாக பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. அதோடு படங்களும் வசூலில் மந்தமாகி விட்டதால், வெற்றிப்பட நாயகி என்கிற பட்டியலில் இருந்து காஜலை நீக்கி விட்டனர் தயாரிப்பாளர்கள்.
இந்த நிலையிலும் தற்போது விக்ரமின் மர்ம மனிதன் மற்றும் பிரமோற்சவம் என ஏற்கனவே கமிட்டான சில படங்களில் நடித்து வருகிறார் காஜல்அகர்வால். இதற்கடுத்து தமிழ், தெலுங்கில் ஒரு நிலையான இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் படுதீவிரம் காட்டினார். ஆனால், இவரது அபிமானிகளின் படங்கள்கூட சமந்தா பக்கம் திரும்பி விட்டன. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் காஜல்.
மேலும், தென்னிந்திய சினிமாவில் தான் நடித்த படங்களும் சமீபகாலமாக வெற்றி பெறாததோடு போட்டி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், தாய்மொழியான இந்தியில் முன்பை விட கூடுதல் கவனத்தை திருப்பியிருக்கிறாராம் காஜல்அகர்வால்.