ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும், நடிகர் சஞ்சய் தத்தும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது கூட்டணியில் வெளியான முன்னபாய் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக சஞ்சய் தத் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்தச்சூழலில், முன்னபாய்-3 படத்தில் சஞ்சய் தத் நடிப்பதாக ராஜ்குமார் ஹிரானி கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது... முன்னாபாய் படத்தின் முந்தைய படங்களை காட்டிலும் சிறப்பான கதையாக முன்னாபாய்-3 படம் இருக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் அதற்கான கதை அமையவில்லை. தற்போது முன்னாபாய்-3-க்கான கதை கிடைத்துவிட்டது. தற்போது அதை எழுதி வருகிறேன். முன்னாபாய்-3யிலும் சஞ்சய் தத் தான் நடிக்கிறார். சமீபத்தில் பரோலில் வந்த சஞ்சயிடம் இப்படம் பற்றி பேசினேன், அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். அவர் வெளியே வந்தபிறகு இந்தப்படம் உருவாகும் என்று கூறியுள்ளார்.