ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் வெனிஸ் நகர திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு விருது பெற்றது. வெற்றிமாறனின் இந்த சாதனையை மற்ற இயக்குநர்கள் பொறாமையோடு பார்க்கவில்லை. மாறாக, வெற்றிமாறனுக்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று பெயர் எடுத்த இயக்குனர் மிஷ்கின் வெற்றிமாறனுக்கு நீண்ட பாராட்டு கடிதம்எழுதி உள்ளார்.
அதை அப்படியே தன் பி.ஆர்.ஓ. மூலம் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அதில், ''நீ கலையின் உச்சியை தொட்டுவிட்டாய்! உன் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்து விட்டாய்! பாலுமகேந்திரா மட்டும் இருந்திருந்தால் உன்னை கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார். ஒரு கடுமையான, உண்மையான திரைப்படமே 'விசாரணை'. மனிதம் என்பதனை இப்படம் எனக்கு உணர்த்தியது. இந்த படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்! இனி, உன்னையும் இதுபோன்ற படைப்புகளையும் மக்கள் பாராட்டுவார்கள்! நண்பா, உன் 'விசாரனை' திரைப்படம் ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது'' என்று பாராட்டு தெரிவித்துள்ளார் மிஷ்கின்.
அது மட்டுமல்ல, மணிரத்னம், ஷங்கர் உட்பட பல பிரபல இயக்குநர்களை அழைத்து தன் அலுவலகத்தின் மொட்டைமாடியில் வெற்றிமாறனுக்கு மினி பாராட்டு விழாவையும் நடத்தி இருக்கிறார். பாராட்டு விழாவுக்குப் பிறகு பார்ட்டி நடைபெற்றதாம். மிஷ்கின் ஏற்பாடு செய்த பாராட்டுவிழாவைக்கண்டு நெகிழ்ந்துபோனாராம் வெற்றிமாறன்.