ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் எதிர்பார்த்ததை விட அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. விஷால் தனது பலத்தை காட்ட நேற்று முன்தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டிக் காட்டினார். மண்டம் நிறைந்து வழியும் அளவுக்கு கூட்டம் கூடியது. தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள் வந்திருந்தார்கள். 60 இளம் ஹீரோக்கள் மேடையில் தோன்றி தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். கமலஹாசன் நாசரை தலைவர் பதவிக்க முன்மொழிந்து தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்தார். சிவகுமார், சத்யராஜ், வடிவேலு, போன்ற முன்னணி கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த எழுச்சி சரத்குமார் தலைமையிலான அணியை கலங்கடித்துவிட்டது. இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்டிக்காட்ட அவர்களும் முழுமூச்சுடன் பணியாற்றி வருகிறார்கள். சரத்குமார், ராதிகா, ராதாரவி, சிம்பு ஆகியோர் தங்களுக்கு நெருக்கமான நடிகர் நடிகைகளை சந்தித்து கண்டிப்பாக கூட்டத்துக்கு வந்து ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ராதாரவி அனைத்து ஊர்களுக்கும் தனது ஆட்களை அனுப்பி நாடக நடிகர்கள் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். விஷால் அணி கமலின் ஆதரவை பெற்று விட்டதால் சரத்குமார் அணி ரஜினி ஆதரவை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது. அனல் பறக்கும் இந்த தேர்தல் பணிகளை தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.