ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இப்போதெல்லாம் சின்னத்திரையாக இருந்தாலும் சரி, பெரிய திரையாக இருந்தாலும் சரி நடிகைகளுக்கு பேயாக நடிப்பதற்கு பிடித்திருக்கிறது. பெரிய திரையில் ஹன்சிகா, த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற பெரிய நடிகைகளே பேயாக நடிக்கிறார்கள். சின்னத்திரையில் அப்படி ஒரு வாய்ப்பு சூசனுக்கு கிடைத்திருக்கிறது.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏழாம் உயிர் தொடரில் அவர்தான் பேயாக நடிக்கிறார். ஏழு பெண்களின் உயிரைக் குடிக்க வேண்டும் என்பது சூசன் பேயின் திட்டம். இதுவரை மூன்று பெண்களை கொன்று உயிரை குடித்துவிட்டார் அடுத் எபிசோடிலிருந்து 4வது உயிரை குடிக்க திட்டம் போடுகிறார். அவரது பட்டியிலில் சீரியலின் நாயகி லட்சுமி விஸ்வநாத்தும் ஒருவர். அவரையும் கொல்கிறாரா. இல்லை அவர் இவரை அழிக்கிறாரா என்பதுதான் சீரியலின் கிளைமாக்ஸ். "பெரிய திரையில் பேயாக நடிப்பது ரொம்ப சிம்பிள் 2 மணி நேரம் பயமுறுத்தினால் போதும் சின்னத்திரையில் அப்படியில்லை. தினமும் 30 நிமிடம் பயமுறுத்த வேண்டும். அதனால் இது சவாலான விஷயம்தான்" என்கிறார் சூசன்.