14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
சிங்கம் படத்தில் தூத்துக்குடியில் ஒரு சிறிய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் துரைசிங்கம் என்கிற சூர்யா, பின்னர் சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராகி விடுவார். அதையடுத்து சிங்கம்-2 படத்தில் தேசிய மாணவர் படை ஆசிரியராக இருப்பவர், ஒருகட்டத்தில் தூத்துக்குடி கடல்பகுதியில் நடக்கும் போதை கடத்தல் கும்பலை கண்டுபிடித்து சிறைபிடித்தார்.
இந்நிலையில், அவர் அடுத்து சிங்கம்-3 படத்தில் நடிப்பதற்காக தயாராகிக்கொண்டிருக்கிறார். முதல் இரண்டு பாகங்களிலும் தமிழ்நாடு போலீசாக நடித்த சூர்யா, இந்த 3வது பாகத்தில் இந்திய காவல்துறை அதிகாரியாக சிஐடி வேடத்தில் நடிக்கிறார். குறிப்பாக, வில்லன் டேனி சபானியை ஜெயிலில் அடைத்து விடுவதோடு அவர் வேலை முடியவில்லையாம. அவருக்கு உள்நாடு, வெளிநாடுகளில் எந்தெந்த நபர்களுடன் தொடர்பு இருக்கிறது என்பதை இந்த பாகத்தில் கண்டுபிடிப்பதுதான் சூர்யாவின் முக்கிய வேலையாம்.