மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சூர்யா மூவீஸ் நிறுவன தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆரம்பம் ,என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இப்போது அஜீத்தின் தலை-56 என்று சொல்லப்படும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார். அவரிடமே ஒரு குழந்தை கதை ஒன்றைச் சொன்னதாம் அதுவும் பேய்க்கதை. இது பற்றி உனக்கென்ன வேணும் சொல்லு படவிழாவில் கூறினார்.
"இன்று பேய்ப்பட உலகம். இது பேய் யுகமாக இருக்கிறது. என்னிடம் ஒரு குழந்தை வந்து ஒரு பேய்க் கதை எழுதியிருக்கிறேன் என்று ஒரு பேப்பரைக் கொடுத்தது. பேய் இருக்கா இல்லையா என்று கேட்டேன். சிரித்துக் கொண்டது பதில் சொல்லவில்லை. கொடுத்த கதையைப் படித்துப் பார்த்தேன். ஒரே பக்கத்தில் அர்த்த முள்ள கதையாகவே இருந்தது அதுவும் ஒரு சஸ்பென்சுடன்இருந்தது. அசந்து விட்டேன். குழந்தைகளையும் பேய்ப்படக் கதை எழுதும் அளவுக்கு பேய்ப்படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. உனக்கென்ன வேணும் சொல்லு படமும் ஒரு பேய்ப்படம் தான்,இதுவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். என்றார்.
பேய்க்கதை சொல்லி குழந்தைகளை பயமுறுத்திய காலம் போய், குழந்தைகளே பேய்க்கதை எழுதுகிற காலத்தில் இருக்கிறோம். எந்த அளவுக்கு காலம் கெட்டுப் போய்விட்டது பார்த்தீர்களா?