ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த ஓணம் பண்டிகைக்கு முன்பு, கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள் ஓட்டிய ஜீப் மோதி, கல்லூரி மாணவி ஒருவர் விபத்துக்குள்ளான விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது பற்றி சொல்லியிருந்தோம் அல்லவா..? அந்த மாணவர்கள் சமீபத்திய ஹிட்டான 'பிரேமம்' பட பாணியில் உடையணிந்து, குடித்துவிட்டு வண்டி ஒட்டியதாகவும, அதனால் விபத்து ஏற்பட்டதாகவும், திரைப்படங்கள் மாணவர்களுக்கு தவறாக வழிகாட்டக்கூடாது என்றும் டி.ஜி.பி.சென்குமார் கருத்து தெரிவித்திருந்தார்..
ஆனால் சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த சாய் பல்லவி, சினிமாவில் காட்டுவதை அப்படியே இமிடேட் பண்ண ரசிகர்கள் ஒன்றும் குரங்குகள் அல்ல என்றும், பிரமேம ட்ரெண்டை பாலோ பண்ணுவதில் தப்பெதுவும் இருப்பதாக தோன்றவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்... ஆனால் இதை கவனித்த மீடியா ஆட்கள் சிலர், சாய் பல்லவி டி.ஜி.பிக்கு எதிராக இந்த கருத்தை சொன்னதாக எழுதிவிட்டர்களாம்.
அவ்வளவுதான், விஷயம் வேறுவிதமாக திசைமாறிப்போவதை உணர்ந்த சாய் பல்லவி, “நான் அந்த அர்த்தத்தில் சொலவில்லை.. ஒரு படம் இதுபோன்ற விஷயங்களுக்காக கண்டனங்களுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்று தான் சொன்னேன்.. நான் சொன்ன வார்த்தைகள் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளன” என்று பதறியடித்து விளக்கம் கொடுத்துள்ளார். நடித்து ஒரு படம் வெளியான நிலையிலேயே சாய் பல்லவி இப்படி கூறியுள்ளது மீடியாவையும், திரையுலகையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.