ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விதார்த் நடித்த ஆள் படத்தை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது அறிமுக நாயகன் சிரிஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கும் மெட்ரோ என்ற படத்தை இயக்கி வருகிறார். தங்கத்தின் விலையை முன்னிறுத்தி இந்தியாவில் நடைபெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற வில்லன் கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு அந்த கேரக்டர் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு வில்லனாக நடிப்பதில்லை என்று முடிவு செய்த பாபிசிம்ஹா, தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில்தான் மெட்ரோ படத்தில் மீண்டும் தாதாவாக நடிக்கிறார் பாபி சிம்ஹா. இப்படத்தில் குணா என்ற நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். முதலில் வில்னாக நடிக்க மறுத்துவிட்டாராம் சிம்ஹா. கதையைக் கேட்டு இம்ப்ரஸ்ஸான பிறகு சில லட்சங்கள் கூடுதல் சம்பளம் வாங்கிக் கொண்டு வில்லனாக நடிக்க யெஸ் சொன்னாராம்.