ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா, வெளிநாடுகள் என வெளியான அனைத்து இடங்களிலும் வசூல் மழையைப் பொழிந்தது. 600 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை புரிந்து இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குப் பிறகு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்குத்தான் தாமதம் ஏற்பட உள்ளது.
அநேகமாக நவம்பர் மாதவாக்கில்தான் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்திற்குக் கிடைத்த அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இன்னும் அதிகமான படைப்பாக்கத்துடன் கொடுக்க ராஜமௌலி நினைத்துள்ளாராம். அதனால், இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட்டில் மேலும் மெருகேற்றி வருகிறாராம்.
படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் வரை தள்ளிப் போவதால் படம் வெளியாவதும் இரண்டு மாதம் தள்ளிப் போகும் என்கிறார்கள். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில்தான் இரண்டாம் பாகத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். இப்போது அடுத்த வருட நவராத்திரி விடுமுறையில் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். படப்பிடிப்பு ஆரம்பமாவதைப் பொறுத்தே ரிலீஸ் தேதியும் இருக்கும் என்கிறார்கள். அதன் பின் கிராஃபிக்ஸ் உருவாக்கத்தில் ஏதாவது தாமதம் ஏற்பட்டாலும் படம் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது.